இளைஞர் வேலைவாய்ப்புக்காகவே முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் - மேட்டுப்பாளையத்தில் நீலகிரி எம்பி ஆ.ராசா பேச்சு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையத்தில் ரூ.1.08 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் துவக்கி வைத்த நீலகிரி எம்பி ஆ.ராசா, முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விளக்கமளித்தார்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீலகிரி எம்பியும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கலைஞர் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கான ஆணைகளையும் ஆ.ராசா வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்குத் தேவையான தொழிற்சாலைகள் போதிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை என்றார்.



"புதிய தொழிற்சாலைகளை தமிழகத்துக்குக் கொண்டு வந்து இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகப்படுத்தவே முதல்வர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்," என்று ஆ.ராசா தெரிவித்தார்.

மேலும், "தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள் முறையாகச் செயல்படுகின்றனரா என உளவுத்துறை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மக்கள் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க தங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்த திமுக அரசு பாடுபடும்," என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பள்ளேபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார், திமுக ஒன்றியச் செயலாளர் சுரேந்திரன், எஸ்.எம்.டி கல்யாணசுந்தரம், டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...