வால்பாறையில் அதிமுக கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்

வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக கட்சியினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மின்கட்டணம், கல்விக் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வு மற்றும் நகராட்சி முறைகேடுகளை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, நகரச் செயலாளர் மயில்கணேஷ்சன், தோட்டத் தொழிலாளர் பிரிவு தலைவர் V. அமீது ஆகியோர் தலைமை தாங்கினர்.

தமிழகத்தில் மின்சார கட்டணம், பள்ளி கல்வி கட்டணம், பால் விலை, சொத்து வரி ஆகியவற்றின் உயர்வை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.



வால்பாறை நகராட்சி முறைகேடுகளை கண்டித்தும், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு, நகராட்சி கடை வாடகை அதிகரிப்பு, குடியிருப்பு சொத்து வரி உயர்வு ஆகியவற்றை எதிர்த்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளில் மக்கள் வளர்ச்சிப் பணிகள் செய்யப்படவில்லை என்றும், பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.



மேலும், குடியிருப்பு பகுதிகளில் தெருவிளக்குகள் இயங்காததால் வனவிலங்குகளின் தொந்தரவு அதிகரித்துள்ளதாகவும், இதனால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் சாலை வசதி செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...