கோவை தியாகி சண்முகா நகரில் குடியிருப்போர் கோரிக்கைகளை கேட்டறிந்த திமுக செயலாளர் நா.கார்த்திக்

கோவை தியாகி சண்முகா நகரில் திமுக செயலாளர் நா.கார்த்திக் குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பூங்கா, மழைநீர் வடிகால், தார்ச்சாலை, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண உறுதியளித்தார்.


கோவை: கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி-2, வார்டு எண் 61, திருச்சி சாலையில் உள்ள தியாகி சண்முகா நகர் பகுதியில் உள்ள குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிய கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் நேரில் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, புதிய பூங்கா அமைத்தல், மழைநீர் வடிகால், தார்ச்சாலை, பாதாள சாக்கடை இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை குடியிருப்போர் முன்வைத்தனர். இந்த கோரிக்கைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக நா. கார்த்திக் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் கிழக்கு மண்டல உதவி ஆணையர் முத்துசாமி, சிங்காநல்லூர் பகுதி 2 செயலாளர் சிங்கை மு.சிவா, மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஸ்வரி, வட்டக்கழக செயலாளர்கள் தென்னவர் செல்வராஜ், அன்பு, இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஹட்கோ ஜெயராமன், வார்டு நிர்வாகிகள் பூங்கொடி, கவியரசு, கலைச்செல்வன், கருணாநிதி, கழக நிர்வாகிகள், நகர்நலச் சங்க நிர்வாகிகள், அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...