2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் திமுக: 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமனம்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமைக் கழகம் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்பார்வையிடுவார்கள்.


திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளது. இதன் முதல் படியாக, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்துள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பார்வையாளர்கள் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட முக்கிய தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிகளை அடுத்து, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் திமுக செயல்பட்டு வருகிறது.

இதற்கான முதல் நடவடிக்கையாக, ஏற்கனவே சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். இக்குழுவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் செய்ய வேண்டிய மாற்றங்கள், கட்சி ரீதியாக செய்ய வேண்டிய சீரமைப்புகள் தொடர்பாக பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த முயற்சிகள் அனைத்தும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறுவதற்கான தயார்படுத்தும் நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...