மடத்துக்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் பேரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புற கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.



சொத்து வரியை உயர்த்தியதோடு மக்களுக்கு விரோதமாக ஆட்சி செய்யும் தமிழக முதல்வர் M.K. Stalin உடனே பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மடத்துக்குளம் பேரூர் கழக செயலாளர் நீலம்பூர் செல்வராஜ் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணியூர், குமரலிங்கம், சங்கரமநல்லூர் ஆகிய பேரூராட்சி அலுவலகங்கள் முன்பும் அதிமுக சார்பில் சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...