ரோட்டராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி கோயம்புத்தூர் 12வது சார்டர் தினம்: மாவட்டம் முழுவதும் சமூக சேவை நிகழ்வுகள்

கோயம்புத்தூரில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி தனது 12வது சார்டர் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 5 அன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு சமூக சேவை நிகழ்வுகளை நடத்தி கொண்டாடியது.


Coimbatore: ரோட்டராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி கோயம்புத்தூர், தனது 12வது சார்டர் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 5 அன்று கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு சமூக சேவை நிகழ்வுகளை நடத்தி கொண்டாடியது.

இக்கொண்டாட்டம் காலை 6:00 மணிக்கு "எப்பொக்" என்ற வினாடி வினா போட்டியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து "மொமன்ட்ஸ் ஆப் ஜாய்" நிகழ்வில், தென்கரை முதியோர் இல்லத்தில் ரோட்டராக்டர்கள் பெரியோர்களுடன் சேர்ந்து சமைத்து, அவர்களுடன் உற்சாகமாக உரையாடினர்.



"காம்ஃபர்ட் ஸ்டெப்ஸ்" நிகழ்வில் ஆதரவற்றோருக்கு காலணிகள் வழங்கப்பட்டன. "இக்யுப்இட்" நிகழ்வில் வடவள்ளி பகுதியில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு எழுத்துப்பொருட்கள் வழங்கப்பட்டன. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் முதலுதவி பெட்டிகள் பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



"இன்ஸ்பிரேஷன்" நிகழ்வில், இளம் ரோட்டராக்டர்கள் தங்களை ஊக்குவித்த மூத்த ரோட்டராக்டர்களுக்கு பரிசுகள் வழங்கி நன்றி தெரிவித்தனர். "முத்திரை" நிகழ்வில், முதியோருக்கு கையொப்பம் இடும் திறனை கற்றுக் கொடுத்தனர். கோவில்பாளையம் கிரேஸ் ஹாப்பி ஹோம் அறக்கட்டளையில் "தித்திப்பு" நிகழ்வில் குழந்தைகளுடன் கேக் வெட்டி சார்டர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.



மாலையில், கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கொசு திரைகள் வழங்கும் "மழலை" நிகழ்வு நடைபெற்றது. "அரவணைப்பு" நிகழ்வில், மருத்துவமனைக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு கம்பளிகள் வழங்கப்பட்டன. "அன்னம்" நிகழ்வில், அரசு மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.



சார்டர் தினத்தின் நிறைவு நிகழ்வாக, சீனியர் மற்றும் ஜூனியர் ரோட்டராக்டர்கள் ஒன்று கூடி தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்த "சியர்ஸ்" நிகழ்வு இடம்பெற்றது. இவ்வாறு, 12ஆம் சார்டர் தினத்தை ரோட்டராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி கோயம்புத்தூர் சிறப்பான சமூக சேவை நிகழ்வுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...