ரோட்டராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி கோயம்புத்தூர் 12வது சார்டர் தினம்: மாவட்டம் முழுவதும் சமூக சேவை நிகழ்வுகள்

கோயம்புத்தூரில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி தனது 12வது சார்டர் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 5 அன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு சமூக சேவை நிகழ்வுகளை நடத்தி கொண்டாடியது.


Coimbatore: ரோட்டராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி கோயம்புத்தூர், தனது 12வது சார்டர் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 5 அன்று கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு சமூக சேவை நிகழ்வுகளை நடத்தி கொண்டாடியது.

இக்கொண்டாட்டம் காலை 6:00 மணிக்கு "எப்பொக்" என்ற வினாடி வினா போட்டியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து "மொமன்ட்ஸ் ஆப் ஜாய்" நிகழ்வில், தென்கரை முதியோர் இல்லத்தில் ரோட்டராக்டர்கள் பெரியோர்களுடன் சேர்ந்து சமைத்து, அவர்களுடன் உற்சாகமாக உரையாடினர்.



"காம்ஃபர்ட் ஸ்டெப்ஸ்" நிகழ்வில் ஆதரவற்றோருக்கு காலணிகள் வழங்கப்பட்டன. "இக்யுப்இட்" நிகழ்வில் வடவள்ளி பகுதியில் உள்ள பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு எழுத்துப்பொருட்கள் வழங்கப்பட்டன. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் முதலுதவி பெட்டிகள் பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



"இன்ஸ்பிரேஷன்" நிகழ்வில், இளம் ரோட்டராக்டர்கள் தங்களை ஊக்குவித்த மூத்த ரோட்டராக்டர்களுக்கு பரிசுகள் வழங்கி நன்றி தெரிவித்தனர். "முத்திரை" நிகழ்வில், முதியோருக்கு கையொப்பம் இடும் திறனை கற்றுக் கொடுத்தனர். கோவில்பாளையம் கிரேஸ் ஹாப்பி ஹோம் அறக்கட்டளையில் "தித்திப்பு" நிகழ்வில் குழந்தைகளுடன் கேக் வெட்டி சார்டர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.



மாலையில், கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கொசு திரைகள் வழங்கும் "மழலை" நிகழ்வு நடைபெற்றது. "அரவணைப்பு" நிகழ்வில், மருத்துவமனைக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு கம்பளிகள் வழங்கப்பட்டன. "அன்னம்" நிகழ்வில், அரசு மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.



சார்டர் தினத்தின் நிறைவு நிகழ்வாக, சீனியர் மற்றும் ஜூனியர் ரோட்டராக்டர்கள் ஒன்று கூடி தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்த "சியர்ஸ்" நிகழ்வு இடம்பெற்றது. இவ்வாறு, 12ஆம் சார்டர் தினத்தை ரோட்டராக்ட் கிளப் ஆஃப் ஜிசிடி கோயம்புத்தூர் சிறப்பான சமூக சேவை நிகழ்வுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...