வடகிழக்கு பருவமழை: பேரிடர் புகார் அளிக்க எளிய முறை - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் புகார் அளிக்க எளிய முறையை அறிவித்துள்ளது. 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம், TN Alert செயலி மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் புகார் அளிக்க எளிய முறையை அறிவித்துள்ளது. அக்டோபர் 7 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், பேரிடர் குறித்து புகார் அளிக்கவும், மழையின் அளவு உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளவும் பல்வேறு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1077, 0422-2301114 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், வட்ட வாரியாக துணை ஆட்சியர் அளவில் கண்காணிப்புக் குழுக்களும், பல துறை அலுவலர்கள் அடங்கிய மண்டலக்குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 66 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மழைநீர் தேங்காமல் செல்ல வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளன. பள்ளிக் கட்டிடங்கள் பழுது பார்க்கப்பட்டு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு 'TN Alert' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களது இருப்பிட வானிலை, முன்னெச்சரிக்கை செய்திகள், தினசரி மழையளவு, நீர்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம், பாதிப்படையக்கூடிய பகுதிகளின் விவரம், பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய அறிவுரைகள் ஆகியவற்றை தமிழிலேயே அறிந்து கொள்ளலாம். மேலும், மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை இந்த செயலி மூலம் எளிதாக புகார் அளிக்க முடியும்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...