கோவை உடையாம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே கள்ள சந்தையில் மது விற்பனை - சப்ளையர் கைது

கோவை உடையாம்பாளையத்தில் டாஸ்மாக் கடை பின்புறம் கள்ள சந்தையில் மது விற்பனை செய்த சப்ளையர் கைது செய்யப்பட்டார். போலீஸ் சோதனையில் 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை உடையாம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே கள்ள சந்தையில் மது விற்பனை செய்த சப்ளையர் கைது செய்யப்பட்டார்.

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் ஆகியோர் நேற்று (அக்டோபர் 7) உடையாம்பாளையம் டாஸ்மாக் கடை (எண் 16 18) பின்புறம் உள்ள காலி இடத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்த மங்கையநேந்தல் ஊரைச் சேர்ந்த சரவணன் (வயது 41) என்பவர் கைது செய்யப்பட்டார். சரவணன் அங்குள்ள பாரில் சப்ளையராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இவரிடமிருந்து 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ள சந்தையில் மது விற்றதாக இவர் மீது ஏற்கனவே 16 வழக்குகள் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...