வால்பாறை: கனமழையில் நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க மக்கள் அவதி

வால்பாறையில் கனமழை காரணமாக நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க மக்கள் சிரமப்படுகின்றனர். கருமலை எஸ்டேட் பகுதியில் அரசு கட்டிடத்தில் புதிய நியாய விலைக் கடை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: வால்பாறையில் கனமழை பெய்து வரும் நிலையில், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, 12வது வார்டுக்குட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் மக்கள் கொட்டும் மழையில் வெளியே நின்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வால்பாறையில் 65க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இங்கு 70க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும், சிந்தாமணி நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. பல எஸ்டேட் பகுதிகளில் எஸ்டேட் நிர்வாகத்தின் இடங்களில் நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. வால்பாறை, முடிஸ், சோலையார் அணை, ரொட்டிக்கடை போன்ற பகுதிகளில் அரசு கட்டிடங்களில் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், குறிப்பாக கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் மழைநீர் உள்ளே வடிகிறது. இதனால் உணவுப் பொருட்கள் சேதமடைகின்றன. மேலும், மக்கள் கொட்டும் மழையில் வெளியே நின்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையை அரசு கட்டிடத்தில் அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...