வால்பாறை: கனமழையில் நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க மக்கள் அவதி

வால்பாறையில் கனமழை காரணமாக நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க மக்கள் சிரமப்படுகின்றனர். கருமலை எஸ்டேட் பகுதியில் அரசு கட்டிடத்தில் புதிய நியாய விலைக் கடை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: வால்பாறையில் கனமழை பெய்து வரும் நிலையில், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, 12வது வார்டுக்குட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் மக்கள் கொட்டும் மழையில் வெளியே நின்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வால்பாறையில் 65க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இங்கு 70க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும், சிந்தாமணி நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. பல எஸ்டேட் பகுதிகளில் எஸ்டேட் நிர்வாகத்தின் இடங்களில் நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. வால்பாறை, முடிஸ், சோலையார் அணை, ரொட்டிக்கடை போன்ற பகுதிகளில் அரசு கட்டிடங்களில் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், குறிப்பாக கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் மழைநீர் உள்ளே வடிகிறது. இதனால் உணவுப் பொருட்கள் சேதமடைகின்றன. மேலும், மக்கள் கொட்டும் மழையில் வெளியே நின்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையை அரசு கட்டிடத்தில் அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...