கோவையில் இரவு நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவையில் இரவு நேரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. கடும் வெயிலுக்குப் பிறகு பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Coimbatore: கோவையில் இரவு நேரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வெளுத்து வாங்கியது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது.

கோவையில் உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், 100 அடி சாலை, சித்தாபுதூர், ராம் நகர், பாப்பநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், ஆவாரம்பாளையம், கணபதி ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது.



காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை நேரத்தில் கோவை மாநகர் பகுதியில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது. இரவில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த ஒன்றரை மாதமாக கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், இப்போது பெய்த கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...