கோவையில் இரவு நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவையில் இரவு நேரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. கடும் வெயிலுக்குப் பிறகு பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Coimbatore: கோவையில் இரவு நேரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வெளுத்து வாங்கியது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது.

கோவையில் உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், 100 அடி சாலை, சித்தாபுதூர், ராம் நகர், பாப்பநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், ஆவாரம்பாளையம், கணபதி ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் கனமழை பெய்தது.



காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை நேரத்தில் கோவை மாநகர் பகுதியில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது. இரவில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த ஒன்றரை மாதமாக கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், இப்போது பெய்த கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...