கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள் வெளியேற்றம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.


Coimbatore: கோவை அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் வெடித்து சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், உடனடியாக மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியது. தொடர்ந்து மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், பள்ளியின் நுழைவாயில், வளாகம், வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நுணுக்கமான சோதனை மேற்கொண்டனர்.



இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதால், பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டனர். இதனால் பள்ளியைச் சுற்றி பதற்றமான சூழ்நிலை நிலவியது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கோவையில் இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு நட்சத்திர ஓட்டல்களுக்கும், அதற்கு முன்னர் ராமநாதபுரம் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் இதே போன்ற மிரட்டல்கள் வந்தன. ஆனால் அனைத்தும் பொய்யான மிரட்டல்களாகவே இருந்தன.

இதுவரை இத்தகைய மிரட்டல்களுக்கு யாரும் கைது செய்யப்படாததால், போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வரும் இத்தகைய மிரட்டல்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருவதால், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...