உடுமலையில் நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி: 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மானுப்பட்டியில் வனஉயிரின வார விழாவின் ஒரு பகுதியாக நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6 கி.மீ தூரம் மிதிவண்டியில் பயணித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மானுப்பட்டி பகுதியில் வனஉயிரின வார விழாவின் ஒரு பகுதியாக நெகிழி எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வு ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் தேவேந்தர குமார் மீனா ஐ.ஃப்.எஸ். அவர்களின் உத்தரவின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலைப்பேட்டை வனச்சரகம், திருப்பூர் வனக்கோட்டம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் ஆரன்யா அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலும், வனவர் நிமல் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.



எண்ணம் போல் வாழ்கை அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஏ.ஐ.நெல்சன் மற்றும் ஆர்.ஜி.எம் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.



ஆர்.ஜி.எம் மேல்நிலை பள்ளி மற்றும் அமராவதி சைனிக் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மிதிவண்டி பேரணியில் கலந்துகொண்டனர்.



மிதிவண்டி பேரணி மானுப்பட்டியில் இருந்து ஏழுமலையன் கோவில் பிரிவு வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.



பின்னர் ஏழுமலையான் கோவில் பிரிவில் மாணவ மாணவிகளுக்கு நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் வனத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கையெழுத்து பிரச்சாரமும் நடைபெற்றது. வனத்துறை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உடனிருந்து நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கினர்.

Newsletter

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...