திருப்பதி லட்டு விவகாரம் மக்களை திசைதிருப்பும் செயல் - சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், பாலஸ்தீன் போர், சாம்சங் தொழிலாளர் பிரச்சினை, பழங்குடி மக்கள் நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.


கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (அக்.6) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பாலஸ்தீன் போரில் 45,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதோடு, நேரடி போரிலும் ஈடுபட்டிருப்பது உலக அளவில் பதட்டமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்தே பாலஸ்தீனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போதைய மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது இந்தியாவின் அணிசேரா கொள்கைக்கு எதிரானது என்றும், இன அழிப்புக்கு ஆதரவு அளிக்கும் போக்கு என்றும் தெரிவித்தார். ஒன்றிய அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், இதனை முன்னிட்டு 7ம் தேதி நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரிவோர் சங்கம் அமைக்க முடிவெடுத்துள்ளனர் என்றும், அதற்கு உரிமையும் உண்டு என்றும் கூறிய அவர், சாம்சங் நிறுவனம் அதனை மறுப்பதாகவும் தெரிவித்தார். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், இந்தப் பிரச்சினைக்கு மூன்று அமைச்சர்களை நியமித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

கோவையில் பழங்குடி மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களை தனியார் விடுதி நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்வதாகவும், சுடுகாடு உட்பட பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் போக்கு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஈஷா வனத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், பெண்களை மூளைச்சலவை செய்து தாய் தந்தை சொல்வதைக் கூட கேட்க மறுக்கும் அளவிற்கு நிலைமை உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஈஷா மீது பாலியல் வழக்கில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு தடை விதித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசிய அவர், இது மக்களைத் திசைதிருப்பும் அநாகரீகமான செயல் என்றார். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளபோது, இந்த விவகாரம் அரசியல் அநாகரீகம் என சாடினார்.

மேலும், சிறு குறு தொழில்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும், மின் கட்டண உயர்வை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தொழில்களைக் காப்பாற்றுவதற்கு மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...