ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்கம்

கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் பிரத்யேக நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்க விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்ற பயிலரங்கமும் நடத்தப்பட்டது.


கோவை: ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் பிரத்யேக நுரையீரல் உயர் இரத்த அழுத்த கிளினிக் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த துவக்க விழாவில், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி Dr.ரகுபதி வேலுசாமி, நிர்வாக மருத்துவ இயக்குனர் Dr. சந்தோஷ் குமார் டோரா, மருத்துவ இயக்குனர் - (Operations) Dr.சந்தோஷ், இருதயவியல் துறை தலைமை மருத்துவர் Dr.சாம்பசிவம், ஹார்ட் பெயிலியர் கிளினிக் மற்றும் எக்கோ கார்டியாலஜி துறை தலைமை மருத்துவர் Dr. சண்முகசுந்தரம், ஆகியோர் பங்கேற்றனர்.



நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆரம்பகால நோயறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த பிரத்தியேக கிளினிக் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துவக்க விழாவின்போது, நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சிகிச்சை உத்திகள் குறித்த மருத்துவத் தொடர் கல்வி (CME) பயிலரங்கம் நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கில் இருதியவியல், நுரையீரல் சிகிச்சை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் குறித்து விளக்கப்படங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.



இந்த பயிலரங்கில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.



ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் இருதயவியல் துறை தலைமை மருத்துவர் Dr.சாம்பசிவம் கூறுகையில், "நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் குறித்து மருத்துவர்கள் மத்தியில் சிறந்த புரிதலை ஏற்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிறந்த முறையில் பயனடையும் வகையில் இந்த கிளினிக் துவங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது, நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்திற்கான முக்கிய அறிகுறி என்றும் அத்தகைய அறிகுறி தென்படும் போது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் குணமடையலாம்" என்றும் அவர் கூறினார்.

இந்த பிரத்தியேக கிளினிக்கை துவங்குவதன் மூலம், நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கான விரிவான சிகிச்சையை வழங்குவதில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை முன்னணி பங்கு வகிக்கும் எனலாம்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...