கோவையில் தொடர் தற்கொலை சம்பவங்கள்: கல்லூரி மாணவி மற்றும் இளைஞர் உயிரிழப்பு

கோவையில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. பி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவி சேலையில் தூக்கிட்டும், குனியமுத்தூரில் இளைஞர் மின்விசிறியில் தூக்கிட்டும் உயிரிழந்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவையில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. பி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவி ஒருவரும், குனியமுத்தூரில் இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

முதல் சம்பவத்தில், நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த அசோக் குமாரின் மகள் கனகவள்ளி (19), கோவை பி.என்.பாளையம் நேதாஜி நகரில் தனது சகோதரி பிரியதர்ஷினியுடன் தங்கியிருந்து பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அக்டோபர் 4 மாலை, கனகவள்ளி தனது அறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இரண்டாவது சம்பவத்தில், கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனாவின் (39) மகன் ஹரிஷ் குமார் (19) தற்கொலை செய்து கொண்டார். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்த ஹரிஷ் குமார், அக்டோபர் 4 இரவு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து இரவு 9 மணி அளவில் வீடு திரும்பிய அர்ச்சனா, மகனின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் ஹரிஷ் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சம்பவங்களிலும் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மாநாடு: நவீன நோய் எதிர்ப்புச் சிகிச்சை முறைகள் குறித்த விரிவான விவாதம்

கோவை KMCH மருத்துவமனையில் TAMPOS நடத்திய மூன்றாவது மாநாடு லீ மெரிடியன் ஹோட்டலில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெற்றது. புற்...

கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆ...

கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆல...

கோவை மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகள் - செந்தில் பாலாஜி பாராட்டு

கோவை வெள்ளலூரில் உள்ள Agaram Kids Montessori பள்ளியில் யு.கே.ஜி பயிலும் மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகளை செய்து சா...

திராவிட மாடல் ஆட்சியில் ஈர்க்கப்பட்டு அதிமுக மாற்று அணியினர் 300 பேர் திமுகவில் இணைப்பு

கோவை கொடிசியாவில் அதிமுக மாற்று அணி மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், குணாளன், முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் முதல்வர...

கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அத...