கோவையில் தொடர் தற்கொலை சம்பவங்கள்: கல்லூரி மாணவி மற்றும் இளைஞர் உயிரிழப்பு

கோவையில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. பி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவி சேலையில் தூக்கிட்டும், குனியமுத்தூரில் இளைஞர் மின்விசிறியில் தூக்கிட்டும் உயிரிழந்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவையில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. பி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவி ஒருவரும், குனியமுத்தூரில் இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

முதல் சம்பவத்தில், நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த அசோக் குமாரின் மகள் கனகவள்ளி (19), கோவை பி.என்.பாளையம் நேதாஜி நகரில் தனது சகோதரி பிரியதர்ஷினியுடன் தங்கியிருந்து பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அக்டோபர் 4 மாலை, கனகவள்ளி தனது அறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இரண்டாவது சம்பவத்தில், கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனாவின் (39) மகன் ஹரிஷ் குமார் (19) தற்கொலை செய்து கொண்டார். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்த ஹரிஷ் குமார், அக்டோபர் 4 இரவு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து இரவு 9 மணி அளவில் வீடு திரும்பிய அர்ச்சனா, மகனின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் ஹரிஷ் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சம்பவங்களிலும் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...