அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். மருத்துவத்துறை, இளைஞர்களின் வாழ்க்கை முறை, அரசியல்வாதிகளின் பொறுப்புகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக விளங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மருத்துவத்துறை நாட்டில் மிக முக்கியமான துறையாகப் பார்க்கப்படுவதாகக் கூறினார். மருத்துவத்துறையில் உள்ளவர்கள் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்றும், ஆதாயம் தேடாமல் ஆத்மார்த்தமாக பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் தொழில்நுட்பம் மருத்துவத்துறையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கியுள்ளதாகவும், நவீன மருத்துவ தொழில்நுட்பம் சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு கூறினார். மேலும், இந்தியாவில் நோயால் இறப்பவர்களில் 27 சதவீதம் இதய நோயால் ஏற்படுவதாகவும், இதைத் தவிர்க்க அதிகப்படியான விழிப்புணர்வு தேவை என்றும் வலியுறுத்தினார்.

இளைஞர்கள் முந்தைய தலைமுறையின் வாழ்க்கை முறைகளைப் பார்க்க வேண்டும் என்றும், மேற்கத்திய கலாச்சார நடைமுறைகளைப் பின்பற்றாமல் இந்திய கலாச்சார வாழ்க்கைப் பழக்கங்களை பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

செல்போன் பயன்பாடு குறித்தும் வெங்கையா நாயுடு எச்சரித்தார். செல்போனை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் அது ஆபத்தில் கொண்டுபோய் சேர்க்கும் என்றும், குழந்தைகள் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அடிமையாகும்போது அவர்களின் வாழ்க்கை பாழாகிறது என்றும் கூறினார்.

இஸ்ரேல்-ஈரான் போரால் தெற்காசிய நாடுகளில் தேவையற்ற குழப்பங்களும் பதற்றமும் உருவாகியுள்ளதாகவும், இது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

இறுதியாக, அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக கட்சி தாவலில் ஈடுபடுவது நாட்டுக்கு நல்லதல்ல என்றும், அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்ல உதாரணமாக விளங்க வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

Newsletter

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...