கோவை: கிழக்கு மண்டல தலைவர் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணியை ஆய்வு செய்தார்

கோவை 52-வது வார்டில் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணியை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ஆய்வு செய்தார். 51-வது வார்டில் சிறப்பு தூய்மை பணிகளையும் தொடங்கி வைத்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சியின் 52-வது வார்டு அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி அக்டோபர் 5 அன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, சூயஸ் குடிநீர் குழாய் உடைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக சரி செய்யுமாறு கிழக்கு மண்டல தலைவர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.



அதே நாளில், கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், 51-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் முத்துசாமி, மாமன்ற உறுப்பினர் அம்சவேணி மணிகண்டன், மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், சுகாதார மேற்பார்வையாளர் ஜீவன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்த இரண்டு வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு பணிகள் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் வசதிக்காக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செய்யப்பட்டுள்ளன.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...