கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் - ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும் என்று ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வரிகளை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இன்று (அக்டோபர் 4) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் அக்டோபர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். இதில் 2024-25ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் பொதுமக்கள் செலுத்தலாம்.

கிழக்கு மண்டலத்தில் குருசாமி நகர், காந்தி நகர், நேரு நகர் ஆகிய பகுதிகளிலும், மேற்கு மண்டலத்தில் ரவி முருகன் அபார்ட்மெண்ட், பெருமாள் கோவில் வீதி, மருதகோனார் வீதி, மாரியம்மன் கோவில் வீதி, தேவாங்க நகர், ஓணாப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் முகாம்கள் நடைபெறும்.

வடக்கு மண்டலத்தில் மணியகாரம்பாளையம், காமதேனு நகர் ஆகிய இடங்களிலும், தெற்கு மண்டலத்தில் கோனவாய்க்கால்பாளையம், ஹவுசிங் யூனிட் பேஸ்-1, சுண்டக்காமுத்தூர் ஆகிய பகுதிகளிலும், மத்திய மண்டலத்தில் நாராயணசாமி லே-அவுட், எம்.என்.ஜி.வீதி, 80 அடி சாலை, கெம்பட்டி காலனி ஆகிய இடங்களிலும் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும்.

மேலும், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) இந்த சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். வழக்கமான வரி வசூல் மையங்கள் அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.

பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய காலத்தில் செலுத்துமாறு ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...