கோவையில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஏடிஎம் கொள்ளையன்

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏடிஎம் கொள்ளையன் அசர் அலி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.


கோவை: கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த மாதம் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி அசர் அலி, கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சூரில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல், கொள்ளையடித்த பணத்தை கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லும் போது, நாமக்கல் மாவட்ட போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டது. அப்போது நடந்த மோதலில், ஜூமாந்தீன் என்ற கொள்ளையன் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளியான அசர் அலியின் காலில் போலீசார் சுட்ட குண்டு பாய்ந்தது.

காயமடைந்த அசர் அலி, கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வலது காலில் ரத்த ஓட்டம் நின்று விட்டதால், அறுவை சிகிச்சை மூலம் அந்த கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (அக்டோபர் 3) மாலை 3 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் அசர் அலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்த மேலும் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...