கோவையில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஏடிஎம் கொள்ளையன்

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏடிஎம் கொள்ளையன் அசர் அலி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.


கோவை: கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த மாதம் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி அசர் அலி, கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சூரில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல், கொள்ளையடித்த பணத்தை கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லும் போது, நாமக்கல் மாவட்ட போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டது. அப்போது நடந்த மோதலில், ஜூமாந்தீன் என்ற கொள்ளையன் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளியான அசர் அலியின் காலில் போலீசார் சுட்ட குண்டு பாய்ந்தது.

காயமடைந்த அசர் அலி, கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வலது காலில் ரத்த ஓட்டம் நின்று விட்டதால், அறுவை சிகிச்சை மூலம் அந்த கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (அக்டோபர் 3) மாலை 3 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் அசர் அலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்த மேலும் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...