கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றினர். இது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.



கோவை: கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று அகற்றினர். இந்த நடவடிக்கை, நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

கோவை, ராமநாதபுரம் சந்திப்பில் இருந்து நஞ்சுண்டாபுரம் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இருபுறமும் உள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமித்திருப்பதால், ரோட்டின் அகலம் சுருங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் நெடுநேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழித்தடமாக, அருகாமையில் உள்ள ஒலம்பஸ் 80 அடி ரோட்டை உருவாக்க மாநகராட்சி முடிவெடுத்தது.

மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த் பிரபாகர் தலைமையில் நகரமைப்பு பிரிவினர், 80 அடி ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ரோட்டின் ஒரு புறம், 70 கடைகளுக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பல கடைகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த ஷெட்கள், மழைநீர் வடிகால் மீது கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் அடுப்புகள் ஆகியவை அகற்றப்பட்டன.

மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், "80 அடி ரோட்டில் இருந்து 100 ரோட்டுக்குச் செல்ல இணைப்பு சாலை ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. இச்சாலை உருவானால் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. நஞ்சுண்டாபுரம் ரோட்டில் இருந்து 100 ரோட்டில் வந்து, 80 அடி ரோடு வழியாக திருச்சி ரோட்டை அடையலாம். இதனால் நஞ்சுண்டாபுரம் சிக்னலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படாது" என்று தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கை மூலம் நகரின் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகன ஓட்டிகளுக்கு பயணம் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...