கோவையில் பொதுமக்களுக்கான நடமாடும் R.O தண்ணீர் டிஸ்பென்சர் அறிமுகம்

கோவையில் முதல் முறையாக பொதுமக்களுக்கான மொபைல் டிராலி சைக்கிள் டிஸ்பென்சர் R.O வாட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை மலிவு விலையில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: கோவையில் முதல் முறையாக பொதுமக்களுக்கான மொபைல் டிராலி சைக்கிள் டிஸ்பென்சர் R.O வாட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த காஜா ஜில் வாட்டர் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கோவையின் அக்குவா கிளேன் மற்றும் ரேணுகா சைக்கிள் நிறுவனங்களுடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பூர்விகா மொபைல் ஷோரூம் அருகே அறிமுகப்படுத்தப்பட்டது. காஜா ஜில் வாட்டர் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.உசேன் வகாப் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.

இது குறித்து கே.உசேன் வகாப் பேசுகையில், "தமிழ்நாட்டில் வாட்டர் பாக்கெட் தடை செய்யப்பட்டுள்ளதையடுத்து, பொதுமக்களின் தேவைக்காக இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். 250 மில்லி டம்ளரில் சுத்தரிக்கப்பட்ட தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்குகிறோம்," என்றார்.

இந்த திட்டத்தின் மூலம் வணிக பகுதி, மார்க்கெட் மற்றும் சாலையோர பகுதிகளில் பொதுமக்களுக்கு மலிவு விலையில் சுத்தமான குடிநீர் கிடைக்கும். மேலும், இது வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்று கே.உசேன் வகாப் தெரிவித்தார்.

இந்த திட்டம் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், முதியோர்கள், காவல்துறையினர், கூலித்தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கே.உசேன் வகாப் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் காஜா ஜில் வாட்டர் கேரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.உசேன் வகாப், அக்குவா கிளேன் உரிமையாளர் குருசாமி, ரேணுகா சைக்கிள் உரிமையாளர் லட்சுமணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...