கோவை ஈஷா மையத்தில் விசாரணை நிறைவு; நாளை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இரண்டு நாட்கள் நடந்த விரிவான விசாரணை நிறைவடைந்தது. அறிக்கை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கோவை எஸ்.பி கார்த்திகேயன் அறிவித்தார்.


Coimbatore: கோவை ஈஷா யோகா மையத்தில் இரண்டு நாட்கள் நடந்த விரிவான விசாரணை நிறைவடைந்ததாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார். விசாரணை குறித்த அறிக்கை நாளை (அக்டோபர் 4) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கோவை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 குழுக்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈஷா மையத்தில் விசாரணை மேற்கொண்டன.

விசாரணையின் போது, ஈஷா மையத்தில் உள்ள அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருப்பவர்களின் விசா உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. ஈஷா பள்ளி வளாகத்தில் தங்கிப் படிக்கும் குழந்தைகளிடமும், துறவறம் பெற்றுள்ள பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இரண்டாவது நாள் விசாரணையில் சுகாதாரத் துறையினர், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மனநல ஆலோசகர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஈஷா மையத்தின் மீதுள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளும் ஆய்வு செய்யப்பட்டதாக எஸ்.பி. கார்த்திகேயன் தெரிவித்தார்.

ஈஷா யோகா மையம் தொடர்பான அனைத்து விவரங்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும், ஈஷா மையம் கொடுத்திருக்கும் புகார்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் எஸ்.பி. கார்த்திகேயன் கூறினார். விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அரசுத் துறை வாகனங்கள் ஈஷா மைய வளாகத்திலிருந்து வெளியேறின.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...