கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன

கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையம், தென் சங்கம்பாளையம், பிள்ளையப்பன்பாளையம் மற்றும் கணியூர் ஆகிய பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. பெரியநாயக்கன்பாளையம், தென் சங்கம்பாளையம், பிள்ளையப்பன்பாளையம் மற்றும் கணியூர் ஆகிய பகுதிகளில் இந்த கூட்டங்கள் நடைபெற்றன.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகளிடம் பொது மக்கள் மனுக்களை வழங்கினர். மேலும், புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



தென் சங்கம்பாளையம் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் எஸ் ஆர் அண்ணாதுரை தலைமையில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பிள்ளையப்பன்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், தலைவர் இலட்சுமண மூர்த்தி தலைமையில் ஊராட்சி வரவு செலவுகள் படித்தல், தூய்மை பணியாளர்களை கௌரவித்தல், பால்வினை நோய்கள் குறித்த உறுதிமொழி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.



சூலூர் வட்டம் கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளுப்பாளையம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள குறைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினார்கள். இலட்சுமி நகர் பகுதியில் உள்ள கோரிக்கைகளை இலட்சுமி வினாயகா மக்கள் சேவை சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்வைத்தது பாராட்டத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...