கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன

கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையம், தென் சங்கம்பாளையம், பிள்ளையப்பன்பாளையம் மற்றும் கணியூர் ஆகிய பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. பெரியநாயக்கன்பாளையம், தென் சங்கம்பாளையம், பிள்ளையப்பன்பாளையம் மற்றும் கணியூர் ஆகிய பகுதிகளில் இந்த கூட்டங்கள் நடைபெற்றன.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகளிடம் பொது மக்கள் மனுக்களை வழங்கினர். மேலும், புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



தென் சங்கம்பாளையம் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் எஸ் ஆர் அண்ணாதுரை தலைமையில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பிள்ளையப்பன்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், தலைவர் இலட்சுமண மூர்த்தி தலைமையில் ஊராட்சி வரவு செலவுகள் படித்தல், தூய்மை பணியாளர்களை கௌரவித்தல், பால்வினை நோய்கள் குறித்த உறுதிமொழி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.



சூலூர் வட்டம் கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளுப்பாளையம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள குறைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினார்கள். இலட்சுமி நகர் பகுதியில் உள்ள கோரிக்கைகளை இலட்சுமி வினாயகா மக்கள் சேவை சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்வைத்தது பாராட்டத்தக்கது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...