காந்தி ஜெயந்தி: தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மரியாதை

தாராபுரத்தில் காந்தி ஜெயந்தி அனுசரிப்பு: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அஹிம்சை வழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


Coimbatore: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர், லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளையும், காமராஜரின் நினைவு நாளையும் முன்னிட்டு அவர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினார்.



இந்நிகழ்வு தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் தலைமையிலும், திமுக நகர அவை தலைவர் கதிரவன் முன்னிலையிலும் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் தென்னரசும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், "காந்தி அஹிம்சை வழியில் போராடியவர். அவர் வழியில் பின்பற்றி நடக்க வேண்டும். அவர் வாழ்ந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், திமுக நகர துணை செயலாளர்கள் கமலக்கண்ணன், தவச்செல்வன், செலின் பிலோமினா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி ராஜேந்திரன், பிரபாவதி பெரியசாமி, நகர் மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் நகர தலைவர் செந்தில்குமார், செய்தி தொடர்பாளர் முருகானந்தம், திருப்பூர் கலைமாமணி கலாராணி, நகராட்சி துணைத்தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் காணபிரியா, அசோக்குமார், வரப்பாளையம் முத்துக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...