காந்தி ஜெயந்தி: தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மரியாதை

தாராபுரத்தில் காந்தி ஜெயந்தி அனுசரிப்பு: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அஹிம்சை வழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


Coimbatore: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர், லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளையும், காமராஜரின் நினைவு நாளையும் முன்னிட்டு அவர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினார்.



இந்நிகழ்வு தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் தலைமையிலும், திமுக நகர அவை தலைவர் கதிரவன் முன்னிலையிலும் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் தென்னரசும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், "காந்தி அஹிம்சை வழியில் போராடியவர். அவர் வழியில் பின்பற்றி நடக்க வேண்டும். அவர் வாழ்ந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், திமுக நகர துணை செயலாளர்கள் கமலக்கண்ணன், தவச்செல்வன், செலின் பிலோமினா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி ராஜேந்திரன், பிரபாவதி பெரியசாமி, நகர் மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் நகர தலைவர் செந்தில்குமார், செய்தி தொடர்பாளர் முருகானந்தம், திருப்பூர் கலைமாமணி கலாராணி, நகராட்சி துணைத்தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் காணபிரியா, அசோக்குமார், வரப்பாளையம் முத்துக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...