காந்தி ஜெயந்தி: தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மரியாதை

தாராபுரத்தில் காந்தி ஜெயந்தி அனுசரிப்பு: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அஹிம்சை வழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


Coimbatore: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர், லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளையும், காமராஜரின் நினைவு நாளையும் முன்னிட்டு அவர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினார்.



இந்நிகழ்வு தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் தலைமையிலும், திமுக நகர அவை தலைவர் கதிரவன் முன்னிலையிலும் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் தென்னரசும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், "காந்தி அஹிம்சை வழியில் போராடியவர். அவர் வழியில் பின்பற்றி நடக்க வேண்டும். அவர் வாழ்ந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், திமுக நகர துணை செயலாளர்கள் கமலக்கண்ணன், தவச்செல்வன், செலின் பிலோமினா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி ராஜேந்திரன், பிரபாவதி பெரியசாமி, நகர் மன்ற உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் நகர தலைவர் செந்தில்குமார், செய்தி தொடர்பாளர் முருகானந்தம், திருப்பூர் கலைமாமணி கலாராணி, நகராட்சி துணைத்தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் காணபிரியா, அசோக்குமார், வரப்பாளையம் முத்துக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...