உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாடு: பென்ஷன் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்

உடுமலையில் நடைபெற்ற இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில், பென்ஷன் தொழிலாளர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுமான தொழிலாளர் பென்சன் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது.



மாநில தொழிற்சங்க அமைப்பாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாடு, உடுமலை குட்டைத்தடல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கியது.



மாநாட்டில் மாநில செயலாளர் பாஸ்கரன் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் பாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் பாஸ்கரன், பென்ஷன் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை ரூ.3000 வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.25,000 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தொழிலாளர்களுக்கு இலவச வீடு கட்டும் திட்டம் மற்றும் இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கணக்கம்பாளையம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த மாநாட்டில் திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில குழு உறுப்பினர் அப்பாஸ், தொழிற்சங்க நிர்வாகி பால் நாராயணன், தொழிற்சங்க அமைப்பாளர் சுந்தர்ராஜ், மகளிர் அமைப்பாளர் வைதேகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...