கோவை கூடலூர் நகராட்சியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

கோவை கூடலூர் நகராட்சியில் மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் அ.அறிவரசு காந்தியடிகள் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா இன்று (அக்டோபர் 2) கொண்டாடப்பட்டது. கூடலூர் நகராட்சியின் 20வது வார்டு குறிஞ்சி நகர் குடியிருப்போர் சங்கம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.



விழாவில் கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் காந்தியடிகள் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



பின்னர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.



தனது உரையில் அறிவரசு, "அண்ணல் காந்தி அவர்கள் விரும்பிய ஒன்றுபட்ட இந்தியாவைக் காப்போம்" என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன் மற்றும் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் செல்வகுமார், செயலாளர் சிவக்குமார் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். அப்பகுதி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் நியாயவிலைக்கடை ஆய்வும் தூய்மைப் பணிகளும்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். குப்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்த...

கோவையில் 42,300 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

கோவை மாநகராட்சியில் மதிப்பிடப்பட்ட 1.11 லட்சம் தெருநாய்களில் 42,300 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது....

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையப் பராமரிப்பு: ஆகஸ்ட் 18-ல் 7 மணி நேர மின் தடை

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18-ல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்...