கோவை கூடலூர் நகராட்சியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

கோவை கூடலூர் நகராட்சியில் மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் அ.அறிவரசு காந்தியடிகள் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா இன்று (அக்டோபர் 2) கொண்டாடப்பட்டது. கூடலூர் நகராட்சியின் 20வது வார்டு குறிஞ்சி நகர் குடியிருப்போர் சங்கம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.



விழாவில் கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் காந்தியடிகள் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



பின்னர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.



தனது உரையில் அறிவரசு, "அண்ணல் காந்தி அவர்கள் விரும்பிய ஒன்றுபட்ட இந்தியாவைக் காப்போம்" என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன் மற்றும் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் செல்வகுமார், செயலாளர் சிவக்குமார் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். அப்பகுதி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...