கோவை கூடலூர் நகராட்சியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

கோவை கூடலூர் நகராட்சியில் மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் அ.அறிவரசு காந்தியடிகள் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா இன்று (அக்டோபர் 2) கொண்டாடப்பட்டது. கூடலூர் நகராட்சியின் 20வது வார்டு குறிஞ்சி நகர் குடியிருப்போர் சங்கம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.



விழாவில் கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் காந்தியடிகள் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



பின்னர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.



தனது உரையில் அறிவரசு, "அண்ணல் காந்தி அவர்கள் விரும்பிய ஒன்றுபட்ட இந்தியாவைக் காப்போம்" என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கூடலூர் நகராட்சி துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன் மற்றும் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் செல்வகுமார், செயலாளர் சிவக்குமார் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். அப்பகுதி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...