சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை: லீமா ரோஸ் மார்ட்டினுக்கு ரோட்டரி சங்கம் கௌரவிப்பு

கோவையில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிகழ்வில், சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை வழங்கிய லீமா ரோஸ் மார்ட்டின் செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டார். வயநாடு நிவாரணம், கோவை சிசிடிவி திட்டம் மற்றும் மாணவர் விஞ்ஞான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.


கோவை: கோவையில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிகழ்வில், சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை வழங்கிய லீமா ரோஸ் மார்ட்டின் செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு அக்டோபர் 1 அன்று கலைஞர் கருணாநிதி கல்லூரியில் நடைபெற்றது.

லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கிய நன்கொடையில், வயநாடு பேரிடர் நிவாரணத்திற்கு ரூ.2 கோடியும், கோவை 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் சிசிடிவி பொருத்தும் பணிக்கு ரூ.7 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 'மிஷன் ரூமி-2024' திட்டத்தின் கீழ் 6000 அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து இந்தியாவின் முதல் மறுபயன்பாடு ஹைபிரிட் ராக்கெட் உருவாக்கத்திற்கு ரூ.4 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.

ரோட்டரி சங்கத்தின் TRF கருத்தரங்கில், "நம்பிக்கையின் மலர்கள்" எனும் தலைப்பில் பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக சேவைகளுக்கு நிதி திரட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மூத்த வழக்கறிஞரும் ரோட்டரி ஆளுநருமான சுந்தர வடிவேலு, வழக்கறிஞர் முருகாம்பாள் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் இணைந்து லீமா ரோஸ் மார்ட்டினுக்கு செங்கோல் வழங்கி கௌரவித்தனர்.

நிகழ்ச்சியில் பிளாட்டினம் சேர் சர்கிள் ரவிசங்கர், இலங்கையைச் சேர்ந்த கௌரி ராஜன், புப்புடு டி சொய்சா, சகுந்தலா ராஹா, ரோட்டரி அறக்கட்டளைத் தலைவர் (இந்தியா), முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, பி.டி.ஜி. எம். ஜோஸ் சாக்கோ, செல்ல ராகவேந்திரா, பத்மகுமார், ஆர்.ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...