சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை: லீமா ரோஸ் மார்ட்டினுக்கு ரோட்டரி சங்கம் கௌரவிப்பு

கோவையில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிகழ்வில், சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை வழங்கிய லீமா ரோஸ் மார்ட்டின் செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டார். வயநாடு நிவாரணம், கோவை சிசிடிவி திட்டம் மற்றும் மாணவர் விஞ்ஞான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.


கோவை: கோவையில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிகழ்வில், சமூக நலனுக்காக ரூ.9 கோடி நன்கொடை வழங்கிய லீமா ரோஸ் மார்ட்டின் செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு அக்டோபர் 1 அன்று கலைஞர் கருணாநிதி கல்லூரியில் நடைபெற்றது.

லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கிய நன்கொடையில், வயநாடு பேரிடர் நிவாரணத்திற்கு ரூ.2 கோடியும், கோவை 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் சிசிடிவி பொருத்தும் பணிக்கு ரூ.7 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 'மிஷன் ரூமி-2024' திட்டத்தின் கீழ் 6000 அரசு பள்ளி மாணவர்களுடன் இணைந்து இந்தியாவின் முதல் மறுபயன்பாடு ஹைபிரிட் ராக்கெட் உருவாக்கத்திற்கு ரூ.4 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.

ரோட்டரி சங்கத்தின் TRF கருத்தரங்கில், "நம்பிக்கையின் மலர்கள்" எனும் தலைப்பில் பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக சேவைகளுக்கு நிதி திரட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மூத்த வழக்கறிஞரும் ரோட்டரி ஆளுநருமான சுந்தர வடிவேலு, வழக்கறிஞர் முருகாம்பாள் மற்றும் முன்னாள் ஆளுநர்கள் இணைந்து லீமா ரோஸ் மார்ட்டினுக்கு செங்கோல் வழங்கி கௌரவித்தனர்.

நிகழ்ச்சியில் பிளாட்டினம் சேர் சர்கிள் ரவிசங்கர், இலங்கையைச் சேர்ந்த கௌரி ராஜன், புப்புடு டி சொய்சா, சகுந்தலா ராஹா, ரோட்டரி அறக்கட்டளைத் தலைவர் (இந்தியா), முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, பி.டி.ஜி. எம். ஜோஸ் சாக்கோ, செல்ல ராகவேந்திரா, பத்மகுமார், ஆர்.ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...