14 ஆண்டுகளுக்குப் பிறகு மாமியார் கொலை வழக்கில் குற்றவாளி கைது

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 2010ல் நடந்த மாமியார் கொலை வழக்கில் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேடப்பட்டியில் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாமியார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் மங்களூரில் மறைந்திருந்த குற்றவாளியை மடத்துக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர்.

2010 ஆம் ஆண்டு, மடத்துக்குளம் அருகே வேடப்பட்டியில் வசித்து வந்த ராஜன் (45) என்பவர் குடும்பத் தகராறில் தனது மனைவி பத்மாவதி மற்றும் மாமியார் காளியம்மாள் (50) ஆகியோரை அரிவாளால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த காளியம்மாள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவத்திற்குப் பின் ராஜன் தலைமறைவானார்.



இந்நிலையில், ரகசிய தகவலின் அடிப்படையில் கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் பதுங்கியிருந்த ராஜனை மடத்துக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர். ராஜன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியைக் கைது செய்த மடத்துக்குளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினருக்கு மாவட்ட காவல் துறை சார்பாக டிஎஸ்பி ஆறுமுகம் பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...