கோவை கிழக்கு மண்டலத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு பட்டா மாறுதல் முகாமை துவக்கி வைத்தார்

கோவை கிழக்கு மண்டலத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி 01.10.2024 அன்று சிறப்பு பட்டா மாறுதல் முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பல்வேறு நில ஆவணங்கள் தொடர்பான சேவைகள் வழங்கப்படுகின்றன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.53க்குட்பட்ட மசக்காளிபாளையம், ஹர்ஷா மஹால் திருமண மண்டபத்தில், "மக்களைத்தேடி மாநகராட்சி" சிறப்பு முகாமின் தொடர்ச்சியாக, "சிறப்பு பட்டா மாறுதல்" முகாமினை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (01.10.2024) துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

இம்முகாமில் கூட்டுப்பட்டா, தனிப்பட்டா, நில அளவை செய்தல், பரப்பளவு திருத்தம், TSLR நகல் மற்றும் வரைபட நகல் உள்ளிட்ட அனைத்து வகையான சேவைகள் தொடர்பான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்றன. தகுதியான விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவாக தீர்வுகாணப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.



மாவட்ட ஆட்சியர் மேலும் கூறுகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு சுமார் 95 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், "முதல்வரின் முகவரி" திட்டத்தின் மூலம் பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீதும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் அமைக்கப்பட்டிருந்த மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கடந்த 26.09.2024 அன்று நடைபெற்ற "மக்களைத்தேடி மாநகராட்சி" சிறப்பு முகாமில் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு பல்வேறு ஆணைகளையும் வழங்கினார்.



இந்நிகழ்வில் துணை ஆணையாளர் க.சிவகுமார், கிழக்கு மண்டல குழுத்தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி இயக்குநர் (நில அளவைத்துறை) சரவணன், உதவி ஆணையர்கள் முத்துச்சாமி(கிழக்கு), துரைமுருகன்(மேற்கு), செயற்பொறியாளர் கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள் மோகன், நவீன்குமார், கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட பல அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...