பொள்ளாச்சியில் நேதாஜி இளைஞர் பேரவை மற்றும் என்ஜிஎம் கல்லூரி மாணவர்கள் இணைந்து ரத்த தான விழிப்புணர்வு பிரச்சாரம்

பொள்ளாச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை மற்றும் என்ஜிஎம் கல்லூரி தேசிய மாணவர் படை இணைந்து அக்டோபர் 1 அன்று தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர். பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி மக்களுக்கு ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.


Coimbatore: பொள்ளாச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை மற்றும் என்ஜிஎம் கல்லூரியின் தேசிய மாணவர் படை இணைந்து தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர். அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வில், அரசு மருத்துவமனை கடைவீதி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ராஜா மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இளைஞர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோரிடம் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம் என்ற தகவலை மக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் தலைமை வகித்தார். நேதாஜி இளைஞர் பேரவை செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். மேலும், நேதாஜி இளைஞர் பேரவை நிர்வாகிகள், நவீன் குமார், என்ஜிஎம் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு இடங்களில் ரத்த தானத்தின் தேவை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரத்த தானம் செய்வதன் மூலம் பலருடைய உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை வலியுறுத்தினர். தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக நேதாஜி இளைஞர் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...