மேட்டுப்பாளையம் அருகே: பவானி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை மீட்ட உள்ளூர் மக்கள்

மேட்டுப்பாளையம் அருகே வச்சினம்பாளையத்தில் பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற குடும்பம் திடீர் வெள்ளத்தில் சிக்கியது. உள்ளூர் மக்கள் கயிறு கொண்டு அவர்களை பத்திரமாக மீட்டனர்.



Coimbatore: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வச்சினம்பாளையத்தில் பவானி ஆற்றில் துணி துவைக்கச் சென்ற குடும்பத்தினர் திடீர் வெள்ளத்தில் சிக்கி தவித்த நிலையில், உள்ளூர் மக்கள் கயிறு கட்டி அவர்களை பத்திரமாக மீட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியைச் சேர்ந்த ராம் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் சென்றனர்.

அங்கு அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டும், துணி துவைத்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தனர். அப்போது திடீரென பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அனைவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் உதவி கேட்டு கத்தி கூச்சலிட்டனர்.

இதைக் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்டு, அருகில் இருந்த தோட்டங்களில் இருந்து கயிறுகளை எடுத்து வந்து, அவற்றைக் கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட 5 பேரிடமும் அறிவுரை கூறிய பொதுமக்கள், இந்த இடத்தில் குளிக்கக் கூடாது என்று பேரூராட்சி நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது என்றும், அதை மீறி குளித்ததால் தான் இந்த அபாயம் ஏற்பட்டது என்றும் தெரிவித்தனர். ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் ஏற்படலाம் என்பதால் தான் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...