கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை

கோவையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக 45 வயதான கண்ணன் பழனிசாமிக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 26 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டு நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு, கோவை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணன் பழனிசாமி (45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், 30.09.2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, குற்றவாளி கண்ணன் பழனிசாமிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சிறப்பாக விசாரித்த புலனாய்வு அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் திறம்பட ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் காவலர் கனிமொழி (WPC 1127) ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...