பாஜக உறுப்பினர் சேர்க்கை: 72 லட்சம் பேர் இணைந்துள்ளதாக கே.பி.ராமலிங்கம் தகவல்

கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு முழுவதும் 72 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.



கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தலைவர் கே.பி.ராமலிங்கம், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.



அப்போது அவர் கூறியதாவது: "செப்டம்பர் 2ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேசியமும் தெய்வீகமும் தான் பாஜகவின் கொள்கை. இந்தக் கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 72 லட்சம் பேர் உறுப்பினராகச் சேர்ந்துள்ளனர்."

"தொடர்ந்து நேர்மையான ஒரு இயக்கம் பாரதத்தை ஆள வேண்டும். அப்படி நேர்மையாக ஆளும் கட்சியாக பாஜக உள்ளது. அதனால் தான் இந்த உறுப்பினர் சேர்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்," என்று கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

மேலும் அவர், "மொத்தமாக தமிழக அமைச்சர்கள் என்பது திருடர்கள் கூட்டம். புதிய திருடன் வந்தால் என்ன, பழைய திருடன் வந்தால் என்ன, எல்லாம் திருடன் தான். புரோக்கர் நல்லபடியாக யார் கமிஷன் பெற்று சபரீசன், உதயநிதிக்கு கொடுப்பார்கள் என்பது தான் செந்தில் பாலாஜி. கமிஷன் பெற்று தருவதில் வல்லவர்," என்றும் குற்றம் சாட்டினார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...