கோவை மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களிடையே மோதல்: மாணவி உள்பட 5 பேர் கைது

கோவை மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், மாணவர்களை கத்தியால் வெட்டிய மாணவி உள்பட 5 பேரை மதுக்கரை போலீஸார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் விடியோ பதிவிடுவது தொடர்பான தகராறு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்தது.


Coimbatore: கோவை மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், மாணவர்களை கத்தியால் வெட்டிய மாணவி உள்பட 5 பேரை மதுக்கரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம் பட்டியைச் சேர்ந்த வீரண்ணன் மகன் கிஷோர் (19), கோவை மதுக்கரை பகுதியில் தனது சகோதரி மோனிகாவுடன் வசித்து வந்தார். இவர் திருமலையாம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சனிக்கிழமை நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவின் போது, இன்ஸ்டாகிராமில் விடியோ பதிவிடுவது தொடர்பாக இரண்டாம் ஆண்டு மாணவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டது.

விழா முடிந்த பின், மதுக்கரை பகுதியில் உள்ள உணவகத்தில் கிஷோர் தனது நண்பர்களுடன் இருந்தபோது, இரண்டாம் ஆண்டு மாணவர் அழகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களை அழைத்துச் சென்று தாக்கினர். இதில் கிஷோர் மற்றும் அவரது நண்பர் ரோஷன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், கிஷோரின் சகோதரி மோனிகா (21) மற்றும் உறவினர் பிரவீசன் (21) ஆகியோர் கிஷோரைத் தேடி வந்தபோது, இரண்டாம் ஆண்டு மாணவர்களான முகேஷ், நிதீஷ்குமார், சபரிபாலா கண்ணன் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மோனிகா, கீழே கிடந்த கத்தியால் மூவரையும் வெட்டி காயப்படுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டு, மோனிகா, பிரவீசன், முகேஷ், ராஜேஸ்வரன், யுவராஜ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். மேலும், அழகேஸ்வரன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கல்லூரி மாணவர்கள் என்பதால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...