கோவை மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களிடையே மோதல்: மாணவி உள்பட 5 பேர் கைது

கோவை மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், மாணவர்களை கத்தியால் வெட்டிய மாணவி உள்பட 5 பேரை மதுக்கரை போலீஸார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் விடியோ பதிவிடுவது தொடர்பான தகராறு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்தது.


Coimbatore: கோவை மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், மாணவர்களை கத்தியால் வெட்டிய மாணவி உள்பட 5 பேரை மதுக்கரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம் பட்டியைச் சேர்ந்த வீரண்ணன் மகன் கிஷோர் (19), கோவை மதுக்கரை பகுதியில் தனது சகோதரி மோனிகாவுடன் வசித்து வந்தார். இவர் திருமலையாம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சனிக்கிழமை நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவின் போது, இன்ஸ்டாகிராமில் விடியோ பதிவிடுவது தொடர்பாக இரண்டாம் ஆண்டு மாணவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டது.

விழா முடிந்த பின், மதுக்கரை பகுதியில் உள்ள உணவகத்தில் கிஷோர் தனது நண்பர்களுடன் இருந்தபோது, இரண்டாம் ஆண்டு மாணவர் அழகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களை அழைத்துச் சென்று தாக்கினர். இதில் கிஷோர் மற்றும் அவரது நண்பர் ரோஷன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், கிஷோரின் சகோதரி மோனிகா (21) மற்றும் உறவினர் பிரவீசன் (21) ஆகியோர் கிஷோரைத் தேடி வந்தபோது, இரண்டாம் ஆண்டு மாணவர்களான முகேஷ், நிதீஷ்குமார், சபரிபாலா கண்ணன் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மோனிகா, கீழே கிடந்த கத்தியால் மூவரையும் வெட்டி காயப்படுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டு, மோனிகா, பிரவீசன், முகேஷ், ராஜேஸ்வரன், யுவராஜ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். மேலும், அழகேஸ்வரன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கல்லூரி மாணவர்கள் என்பதால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...