கோவை: வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை - மலையோர கிராம மக்கள் அச்சம்

கோவை ஓணப்பாளையத்தில் வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. இதனால் மலையோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



Coimbatore: கோவை மாவட்டத்தில் சிறுத்தைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் வடவள்ளி அருகே உள்ள ஓணப்பாளையத்தில் ஒரு வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓணப்பாளையத்தைச் சேர்ந்த ஷயாம் சுந்தர் என்பவரின் தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த சிறுத்தை, அங்கு வளர்க்கப்பட்டு வந்த நாயை கடித்து இழுத்துச் சென்றது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதற்கு முன்னதாக, கோவை தொண்டாமுத்தூர், வண்டிக்காரனூர், விராலியூர், மருதமலை மதுக்கரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி சென்றன. இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

சமீபத்தில் வண்டிக்காரனூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்படவில்லை.

தற்போது மீண்டும் சிறுத்தை தாக்குதல் நிகழ்ந்துள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சிறுத்தையை பிடித்து வனப் பகுதியில் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...