கோவை: வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை - மலையோர கிராம மக்கள் அச்சம்

கோவை ஓணப்பாளையத்தில் வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. இதனால் மலையோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



Coimbatore: கோவை மாவட்டத்தில் சிறுத்தைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் வடவள்ளி அருகே உள்ள ஓணப்பாளையத்தில் ஒரு வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓணப்பாளையத்தைச் சேர்ந்த ஷயாம் சுந்தர் என்பவரின் தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த சிறுத்தை, அங்கு வளர்க்கப்பட்டு வந்த நாயை கடித்து இழுத்துச் சென்றது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதற்கு முன்னதாக, கோவை தொண்டாமுத்தூர், வண்டிக்காரனூர், விராலியூர், மருதமலை மதுக்கரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி சென்றன. இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

சமீபத்தில் வண்டிக்காரனூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்படவில்லை.

தற்போது மீண்டும் சிறுத்தை தாக்குதல் நிகழ்ந்துள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சிறுத்தையை பிடித்து வனப் பகுதியில் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...