தலித் மக்கள், பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தலித் மக்கள், பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி BSNL அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



Coimbatore: கோவையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தலித் மக்கள், பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் தலித் மக்கள், பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களை, மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் BSNL அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்றுதல், புதிய கல்விக் கொள்கையை கைவிடுதல், IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துதல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...