தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு: கோவையில் விழிப்புணர்வு பேரணி

கோவையில் தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவையொட்டி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பேரணியை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன் தொடங்கி வைத்தார்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் இறுதி நாளான செப்டம்பர் 30 அன்று, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30 வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பேரணிக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், செல்வபுரம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட வட்டாரங்களைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணியாளர்கள் வள்ளி கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



மேலும், பெண்கள் காய்கறிகளை ஆபரணமாக அணிந்தும், முகத்தில் வண்ணம் பூசியும் கவனத்தை ஈர்த்தனர். இதையடுத்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் கோவையின் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவியர் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பங்கேற்பாளர்கள் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர்.



இந்த விழிப்புணர்வு பேரணி மூலம், சமூகத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...