சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் சாலையில் நடந்து வந்த காட்டு யானை பாகுபலி: சுதாரித்து செயல்பட்ட பொதுமக்கள்

சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் பாகுபலி என்ற காட்டு யானை சாலையில் நடந்து வந்தது. பொதுமக்கள் சுதாரித்து செயல்பட்டு, வாகனங்களை நிறுத்தி, யானையை பாதுகாப்பாக காட்டுப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களால் பாகுபலி என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று நடமாடி வருகிறது. இந்த யானை பொதுவாக இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி, வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகே நடமாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக பாகுபலி யானை சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு போன்ற பகுதிகளில் நடமாடி வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு சிறுமுகையில் இருந்து லிங்கபுரம் செல்லும் பிரதான சாலையில் லிங்காபுரம் கிராமத்தில் பாகுபலி யானை தனியாக நடந்து வருவதை அப்பகுதி கிராம மக்கள் கண்டுள்ளனர்.



யானை நடமாடுவதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டு, செல்போன் மூலம் தகவல் பரிமாறி, எதிரெதிரே வரும் வாகனங்களை நிறுத்தச் சொல்லி போக்குவரத்தை தடை செய்தனர். இதனைத் தொடர்ந்து, காட்டு யானை சாலையில் அமைதியாக நடந்து வந்து, தனது வழக்கமான வலசை பாதையாக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பகுதியில் நுழைந்து ஆடர் வனப்பகுதிக்குள் சென்றது.

பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் சுயாதீனமான செயல்பாட்டால், யானை வருவதை முன்கூட்டியே கண்டறிந்து தகவல் பரிமாறியதால், எந்தவித அசம்பாவிதமும் இன்றி நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. இத்தகைய விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு மனித-விலங்கு மோதல்களைத் தவிர்க்க உதவும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...