கோவையில் 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' மாரத்தான்: மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு

கோவையில் GKNM மருத்துவமனை மற்றும் LMW நிறுவனம் இணைந்து 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' மாரத்தான் நடத்தியது. இதய குறைபாடு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோவையில் ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற மாரத்தான் தொடர் ஓட்ட நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையிலும், அவர்களது வாழ்வில் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி ஆகியோர் கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தினை துவக்கி வைத்தனர்.



மாரத்தான் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. அனைத்து வயதினருக்கும் 1 & 3 கி.மீ தொலைவு ஓட்டம், 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 5 கி.மீ ஓட்டம், மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கி.மீ ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. 5 மற்றும் 10 கி.மீ பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மொத்தம் ரூ.75,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.



இந்த மாரத்தானில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். குறிப்பாக, ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளும் இந்த மரத்தானில் கலந்து கொண்டு ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு மூலம், நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினருக்கும் ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...