உடுமலை திருப்பதி கோவிலில் இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.



கோவில் நுழைவாயில் பகுதியில் இருந்து நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து ஸ்ரீ வெங்கடேச பெருமாளை சாமி தரிசனம் மேற்கொண்டனர்.



இன்று காலை ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், புஷ்பம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். சாமி தரிசனத்துக்கு வந்த அனைத்து பொதுமக்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு வழிபாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருப்பதி கோவில் நிர்வாகம் முன்னதாகவே செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...