கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு: லஞ்சம் வாங்க முயன்ற கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் கைது

திருப்பூர் மாவட்டம் போகலூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் உரங்களை வழங்கி வந்த இவர் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கருப்புசாமியுடன் மேலும் 2 பேர் மீதும் முறைகேடு வழக்கு பதியப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும், மாவட்ட நீதிமன்றத்திலும்  கருப்புசாமி வழக்கு தொடுத்தார். ஆனால், இரண்டு நீதிமன்றங்களும் கருப்புசாமியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டன. 

இதனை தொடர்ந்து, தன் மீதான துறை ரீதி விசாரணைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளரான வசந்தராஜ்-ஐ அணுகினார்.

இதற்காக வசந்தராஜ் ரூ.5 ஆயிரத்தை கருப்புசாமியிடம்  லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து, அவர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒரு தேநீர் கடைக்கு வந்தனர். மேலும், இரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கருப்புசாமியிடம் கொடுத்த அவர்கள், அவற்றை வசந்தராஜ்-இடம் கொடுக்குமாறு கூறினார்.

அப்போது, தேநீர் கடைக்கு வந்த வசந்தராஜ், கருப்புசாமியிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை லஞ்சமாக வாங்கினார். அங்கு மறைந்திருந்த போலீசார் கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளரான வசந்தராஜ்-ஐ கையும் களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வசந்தராஜ்_ஐ கைது செய்தனர்.

இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...