மேட்டுப்பாளையம் நகர்மன்றக் கூட்டத்தில் பதற்றம்: திமுகவினர் தாக்குதலில் அதிமுக உறுப்பினர் படுகாயம்

மேட்டுப்பாளையம் நகர்மன்றக் கூட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சையால் பதற்றம். அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட். திமுகவினர் தாக்குதலில் அதிமுக உறுப்பினர் குரு பிரசாத் படுகாயம். கோவை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் ஒருவர் திடீரென தண்ணீர் குடிக்கும் டம்ளரை வீசி எறிந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒழுங்கு நடவடிக்கையாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 9 பேரை அடுத்த இரண்டு நகர்மன்றக் கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக நகராட்சித் தலைவர் மெஹரீபா பார்வின் அறிவித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 9 பேர் நகராட்சிக் கூட்ட அரங்கில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். நகராட்சி ஆணையாளர் மற்றும் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி இரவு 8 மணிக்கு உடன்பாடு ஏற்பட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் வெளியே வந்தனர்.

அப்போது நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்த திமுக நிர்வாகிகள் சிலர் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களைத் தாக்கினர்.



இந்தத் தாக்குதலில் அதிமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் குரு பிரசாத் அவர்களுக்குக் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக குரு பிரசாத் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிமுக மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மருத்துவமனை வளாகத்தில் கூடினர்.

குரு பிரசாத்தின் உடல் நிலை மோசமடைந்ததால், உடனடியாக அவரை மருத்துவர்கள் உயர் சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதலில் அவருக்குப் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தச் சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...