கோவையில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு மனித சங்கிலி: காவல் துணை ஆணையர் ஸ்டாலின் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் தூய்மை இந்தியா விழிப்புணர்வுக்காக மனித சங்கிலி அமைத்தனர். காவல் துணை ஆணையர் ஸ்டாலின் உரையாற்றி உறுதிமொழி ஏற்றார்.



கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



அவர் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். மேலும், மாணவர்களுடன் சேர்ந்து தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டார்.



இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



அவர்கள் "சுத்தமாக இருங்கள் ஆரோக்கியமாக இருங்கள்", "குப்பை போடவே குப்பை தொட்டி", "சுத்தமான பூமி", "பசுமை பூமி" உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...