கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை

கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த புகார் அடிப்படையில் 60க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பீளமேடு, சரவணம்பட்டி, ஈச்சனாரி பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.



கோவை: கோவை மாநகர காவல்துறையினருக்கு கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது.



இதனையடுத்து, கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் பல்வேறு இடங்களில் 60க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.



இந்த சோதனையின் போது, கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் வேறு யாரேனும் தங்கி இருக்கிறார்களா, வேறு ஏதேனும் சட்டவிரோத பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



இந்த அதிரடி சோதனையில் காவல் ஆய்வாளர்கள் கந்தசாமி, அருண், ராஜேஷ், முத்துலட்சுமி, தௌலத் நிஷா, பிரான்சிலின், சரவணன் மற்றும் உதவி ஆணையர் பார்த்திபன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.



பீளமேடு, சரவணம்பட்டி, ஈச்சனாரி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த திடீர் சோதனை நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...

கோவை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் 49 மனுக்கள் பெறப்பட்டது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, வரி, சுகாதாரம் உள்ள...

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...